Tuesday, 27 September 2011

உலகத்தில் எத்தனையோ உத்தமர்கள் தோன்றினார்கள். ஆனால் 20 ஆம் நுற்றாண்டில் உணர்ச்சிகளை உள்ளடக்கி தியாகத்தை வெளிப்படுத்தி மனோதத்துவம் என்பதை ஏற்படுத்தி தெய்வீகத்தையும் தேசியத்தையும் ஏற்படுத்தியதோடு மட்டுமின்றி துல்லியமாக தனது பாதை விலகாது நடந்தவர் முத்துராமலிங்கத் தேவர் ஆவார். அவரைத் தவிர மற்றையோர் யாரும் இன்னும் பிறந்து வரவும் இல்லை; இனிமேல் பிறக்கவும் முடியாது.



இந்துவின் வயிற்றிலே பிறந்து முஸ்லிம் மடியில் தவழ்ந்து கிருஸ்துவரின் அரவணைப்பிலே கல்வி கற்று பாரத நாட்டின் விடுதலை போரில் விடுதலை தளபதியாய் விளங்கியவர்.விவேகானந்தரின் தாசராகவும் நேதாஜியின் நேசராக, நேர்மையின் துதராக, சத்தியத்தை சீடராக விளங்கியவர் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர். அவர் வார்த்தை பிறழாது நடக்கக்கூடியவர். திடமானவர், நெறியாளர், திட வைராக்கிய மெய்ஞானி, திறமைமிகு தியாகச்சுடர், தீரமிகு அரசியல் தீர்க்கதரிசியாவார். வெண்மை நிறங்கொண்டு உடையளவில் மட்டுமல்லாது மனதளவிலும் விளங்கியவர்.


மன்னராக இல்லாமலும் மன்னராக விளங்கினார்.’பசும்பொன்’ என்ற சொல்லுக்கு இரண்டு பொருள் உண்டு. ஒன்று பசும்பொன் என்றால் சுத்தமான தங்கத்தைக் குறிக்கும்.மற்றொன்று பசும்பொன் என்றால் தேவர்த்திருமகனாரையே குறிக்கும்.திருமகனார் அவர்கள் தமிழகம் உயர தமிழ் வளர தமிழ்ச்சமுதாயம் உயர போராட்டக்கல்லில் உரசி உரசி மக்களுக்காக பாடுபட்டிருக்கிறார். சேது வேங்கை என்றும் அழைக்கப்படுவார்.தவசிக்குறிஞ்சி, பசும்பொன் என்ற இரண்டு பெயர்களும் ஒரே ஊரைக்குறிக்கும். தவசிக்குறிச்சி என்னும் ஊர் இராமநாதபுரம் அரண்மனையில் இன்றும் யாரும் நுழையமுடியாத அளவிற்கு விளங்குகிறது என்றால் அப்போது எப்படி இருந்திருக்கும்..........




நம்முடைய கடவுளின் பிறப்பு :




30.10.1908 ஆம் ஆண்டு தேவர் திருமகன் பிறந்தார். 32 கிராமங்களும் மகிழ்ச்சி வெள்ளத்தில் திரண்டு வந்தது. ஊர்கள் அனைத்தும் கூடி உள்ளம் கனிந்தது.வீரமும், விவேகமும், நேர்மையும் கொண்டு வாழ்ந்த ஆதி முத்துராமலிங்கத்தேவரின் பெயரையே வைக்கவேண்டும் என்று அப்பெயரையே தேவர் திருமகனுக்கு வைத்தனர். ஆகவே இவர் முத்துராமலிங்கம் என்று அழைக்கப்பட்டார். குழந்தையின் பாசத்தில் அளவுகடந்த எல்லையைத் தாண்டிய அவ்வம்மையார் தங்க தமிழ் மகனை தனியே விட்டுவிட்டு இறந்துவிட்டார். காலனுக்கு கருணை இல்லையே.


உக்கிரபாண்டியத்தேவர் இதயத்தில் பெரும் இடி விழுந்தது என்றே சொல்ல முடியும். அப்போது இந்துமாதக் குழந்தையே தேவர் திருமகன். அப்போது குழந்தையின் அழுகைசத்தம் கேட்டு உக்கிரபாண்டித்தேவர் வெறுப்படைந்தார். அப்பொழுது அவர் கொண்ட வெறுப்பு உக்கிரபாண்டித்தேவர் இறந்துபோகும் வரையிலும் இருந்தது. ஆகத் தன் வாழ்நாளில் தாய் தந்தை பாசமே அறியாது இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.துன்பங்கள் என்பது மழையில் இருக்கும் கல்லை உருட்டி பாதளத்தில் தள்ளிவிடுவது போன்றது அதுபோல் மனிதனின் துன்பம் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும். அதுபோல மீண்டும் ஒரு துன்பம் உக்கிரபாண்டித்தேவரை மேலும் தாக்கியது. அவரது இரண்டாவது மனைவியான காசிலெட்சுமியையும் மரணம் வலை வீசிப்பிடித்து இழுத்துக்கொண்டது. குழந்தை முத்துராமலிங்கத்திற்கு இப்போது ஆறாவது மாதம் தவித்து கலங்கியது.


தேவர் திருமகனார் அவர்களுக்கு மாட்டுப் பாலோ ஆட்டுப்பாலோ கொடுக்க விரும்பவில்லை, வைத்தியம் பிள்ளை தாய்ப்பால் கொடுக்க வேண்டும் அப்போதுதான் அறிவு நன்றாக வளரும் என அவர் தெரிவித்தார். பசும்பொன் கிராமம் முழுக்க தாய்மார்கள் தேடப்பட்டார்கள். தேடியதில் “மாதா சாந்த் பீவி” தாயாக இருந்தார்கள். அந்தத் தாய் தன் குழந்தையினும் மேலாக பாலுட்டி வளர்த்தார்.இவர்க்கு பால் கொடுத்ததால் பிற்காலத்தில் அந்த தாயின் பெயர் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படுள்ளது குறிப்பிடத்தக்கது.






கனிவு, வீரம், ஈகை, சகோதரத்துவம் போன்ற குணங்களோடு, தனது இளமையைத் துவங்கிய முத்துராமலிங்கத் தேவர், தன் வாழ்நாள் முழுவதும் அதே குணங்களோடு வாழ்ந்தார். அதேபோல், அவர் ஒரு சித்தர் என்கிற அளவிற்கு ஆன்மிகவாதியாகத்
திகழ்ந்தார்


ஆசிரியருக்கே அறிவுரை :


1924 ஆம் ஆண்டு தெய்விகச் செல்வர் தமது ஐந்தாம் வகுப்பை முடித்தார். உயர்நிலைக்கல்வி கற்பதற்காக இப்போது மதுரையில் புகழ்பெற்று விளங்கும் ( u.c.school ) ஐக்கிய கிருஸ்தவ உயர்நிலைப்பள்ளியில் போய்ச் சேர்ந்தவர்.ஒருநாள் சிறுவனாக இருந்த முத்துராமலிங்கத் தேவரிடம்,ஆசிரியராக இருந்த ஒரு கிறிஸ்தவ பாதிரியார், “நீ இந்து. உன்னை ஒன்று கேட்கிறேன்… இதோ இங்கே கீழே கிடக்கிறதே இந்தக் கல்லும் தெய்வமா?” என்று சிறு கல் ஒன்றை எடுத்துக்காட்டிக் கேட்டார்.அதற்கு சிறிதும் முகமாற்றமில்லாமல் சிரித்தபடியே முத்துராமலிங்கத் தேவர் பதில்சொன்னார்:


“ஐயா… ஒரு கல்லில் துணி துவைக்கலாம். ஒரு கல்லில் அம்மி அரைக்கலாம்…மற்றொரு கல்லில் சுவாமி சிலை வடிக்கலாம். ஆனால், துணி துவைக்கும் கல்லில் துணியை மட்டும்தான் துவைக்கமுடியும். அதை கடவுளாகத் தொழ முடியாது. அதேபோல அம்மிக்கல்லை அரைக்க பயன்படுத்துவதை விட்டுவிட்டு,கடவுளாக யாரும் கும்பிட மாட்டார்கள். சுவாமி சிலையும் அப்படித்தான்… அது வணங்குவதற்காக,தொழுவதற்காக மட்டும்தான். அதில் துவைக்கவோ, அரைக்கவோ முடியாது. ஆக… கல் என்பது ஒன்றுதான். அதில் மூன்று விதமான செயல்கள் நிகழ்கின்றன. அதனால், கீழே கிடக்கிற இந்தக் கல்லை எடுத்துஇதுவும் தெய்வமா என்று நீங்கள் கேட்டால் எப்படிய்யா…?” சிறுவனான முத்துராமலிங்கத் தேவர் இப்படிக்கேட்க, அவரின் விளக்கத்தால் வாயடைத்துப்போன பாதிரியார், அன்றிலிருந்து தேவருக்கு பள்ளிக்கூடத்தில் இரட்டிப்பு மதிப்பைக் கொடுக்கத் துவங்கினார்.


தொடரும்....


நன்றி தேவர் தளம் .....




4 comments:

  1. maelum thevar avargal oru caste thalivar illai avar anaithu makalukagavum paadu patavar,, kuripaga thevar inathai kaatilum pira thaltha patta sathiyinarkae avar paadu patulaar,, thanathu sothukalai 16 pangaka pirithu 13 panginai sc\st people ku kuduthulaar,,, avaruku kovil elupi poojai seaiya aaramnithathum avargalae,, aanal indru thevar avargalai oru caste leader aaga sitharika patulaar ithu vaethanai kuriya visayam

    ReplyDelete
  2. miga seri ini namthan epadi nadvathu parkavendum...... ondraga irupom jeythu katuvom veera vasagangal vendam valvil muneruvom munetruvom......

    ReplyDelete
  3. அருமை !அருமை !

    ReplyDelete

fuel needed for our race